Wednesday 28 December 2011

அழகின் முகவரி

மெலிதாய் மழைத் தூறும் மாலையில்

மண்வாசனையை நுகர்ந்தபடி


விரல் பிடித்து நடக்கையில் நீ

வேண்டுமென்றே கேட்கின்றாய்


நான் ஒன்றும் அழகில்லை தானே

நீ ஏன் என்னை விரும்புகிறாய் என்று


ஆம் நீ அத்தனை அழகில்லை என்று தான்

அனைவரும் கூறுகின்றனர் ஆனால்


அக்கறை கொண்ட உன் பார்வை அழகு

அன்பை பொழியும் உன் இதயம் அழகு


இனிய சொற்களே பேசும் உன்

இதழ்கள் அழகு


நெரிசலில் நான் இடிபடாமல்

கவசமாய் காக்கும் கரங்கள் அழகு


நான் எங்கிருந்தாலும் எனைக்காண

நாடிவரும் கால்கள் அழகு


உயிரில் கலந்த உன் நேசம் அழகு

உன்னால் இந்த உலகமே அழகு


நீ அழகா இல்லையா என்று

நிச்சயமாய் தெரியாது ஆனால்


அழகு என்ற வார்த்தையைக் கேட்டால்

அடுத்து என் நினைவுக்கு வருவது நீதான்

No comments:

Post a Comment