மெலிதாய் மழைத் தூறும் மாலையில்
மண்வாசனையை நுகர்ந்தபடி
விரல் பிடித்து நடக்கையில் நீ
வேண்டுமென்றே கேட்கின்றாய்
நான் ஒன்றும் அழகில்லை தானே
நீ ஏன் என்னை விரும்புகிறாய் என்று
ஆம் நீ அத்தனை அழகில்லை என்று தான்
அனைவரும் கூறுகின்றனர் ஆனால்
அக்கறை கொண்ட உன் பார்வை அழகு
அன்பை பொழியும் உன் இதயம் அழகு
இனிய சொற்களே பேசும் உன்
இதழ்கள் அழகு
நெரிசலில் நான் இடிபடாமல்
கவசமாய் காக்கும் கரங்கள் அழகு
நான் எங்கிருந்தாலும் எனைக்காண
நாடிவரும் கால்கள் அழகு
உயிரில் கலந்த உன் நேசம் அழகு
உன்னால் இந்த உலகமே அழகு
நீ அழகா இல்லையா என்று
நிச்சயமாய் தெரியாது ஆனால்
அழகு என்ற வார்த்தையைக் கேட்டால்
அடுத்து என் நினைவுக்கு வருவது நீதான்
மண்வாசனையை நுகர்ந்தபடி
விரல் பிடித்து நடக்கையில் நீ
வேண்டுமென்றே கேட்கின்றாய்
நான் ஒன்றும் அழகில்லை தானே
நீ ஏன் என்னை விரும்புகிறாய் என்று
ஆம் நீ அத்தனை அழகில்லை என்று தான்
அனைவரும் கூறுகின்றனர் ஆனால்
அக்கறை கொண்ட உன் பார்வை அழகு
அன்பை பொழியும் உன் இதயம் அழகு
இனிய சொற்களே பேசும் உன்
இதழ்கள் அழகு
நெரிசலில் நான் இடிபடாமல்
கவசமாய் காக்கும் கரங்கள் அழகு
நான் எங்கிருந்தாலும் எனைக்காண
நாடிவரும் கால்கள் அழகு
உயிரில் கலந்த உன் நேசம் அழகு
உன்னால் இந்த உலகமே அழகு
நீ அழகா இல்லையா என்று
நிச்சயமாய் தெரியாது ஆனால்
அழகு என்ற வார்த்தையைக் கேட்டால்
அடுத்து என் நினைவுக்கு வருவது நீதான்
No comments:
Post a Comment