Wednesday 28 December 2011

தை மகள்

கதிரவன் கரங்கள் நீட்டிக்

கமலம் தன் இதழ் விரிக்க

காலையின் பனிப்போர்வையில்

கன்னியர் பொங்கல் வைக்க

கரும்பின் நல் சுவையினாலே

கன்று தாய்ப் பால் மறக்க

உழவர் ஏர் பூட்டிச் சென்று

உவப்புடன் கழனி சேர

நல்லவை நடக்குமென்ற

நாயகன் அருளினாலே

தை மகள் தேரில் ஏறி

தமிழகம் பவனி வந்தாள்

No comments:

Post a Comment