Wednesday 28 December 2011

ஆச்சர்யம்

பார்த்த நாள் முதலாய் என்

பழக்க வழக்கங்கள் அறிவாய்

வாய் வார்த்தை இல்லாமலேயே என்

விருப்பு வெறுப்புக்கள் அறிவாய்

என் சிந்தனையின் ஓட்டம் நான்

செப்பாமலேயே அறிவாய்-என்

அன்னை தந்தை சுற்றம் நான்

அறிவிக்காமலேயே அறிவாய்

அத்தனை அறிந்தும் பார்த்தவுடன் எனை

அறியாதது போல் முகபாவம் கொள்வாய்

ஆச்சர்யம் அடைகிறேன் நான்

அது எப்படி உன்னால் முடிகிறது?

No comments:

Post a Comment