காலையில் கண்விழித்துப் பார்க்கும் பொழுது-உன்
கமல முகம் கண்டு களித்திடும் மனது
தெய்வத்தை நான் தொழத் தேவையில்லை
தாயே நின் தாளைத் தினமும் தொழுவதால்
அலுவலகம் செல்லும் வேளையில்
அன்னையே நின் அன்பு முத்தம் போதும்
வேலைப்பளு என்னை வாட்டியதில்லை
வாசலில் நீ நின்று வரவேற்பதால்
தங்கம் வைரம் நான் வேண்டுவதில்லை
தாயே நின் பொன்முகத்தின் புன்னகையால்
எந்தத் துயரும் என்னை எதுவும் செய்யாது
எனைத் தாங்கிக்கொள்ள உன் கரம் இருப்பதால்
சோகங்கள் என்னை சாய்த்துவிடாது
சுமைதாங்கியாய் நீ இருப்பதால்
சொர்க்கமும் எனக்குத் தேவையில்லை
சாய்ந்துகொள்ள உன் மடி இருப்பதால்
கமல முகம் கண்டு களித்திடும் மனது
தெய்வத்தை நான் தொழத் தேவையில்லை
தாயே நின் தாளைத் தினமும் தொழுவதால்
அலுவலகம் செல்லும் வேளையில்
அன்னையே நின் அன்பு முத்தம் போதும்
வேலைப்பளு என்னை வாட்டியதில்லை
வாசலில் நீ நின்று வரவேற்பதால்
தங்கம் வைரம் நான் வேண்டுவதில்லை
தாயே நின் பொன்முகத்தின் புன்னகையால்
எந்தத் துயரும் என்னை எதுவும் செய்யாது
எனைத் தாங்கிக்கொள்ள உன் கரம் இருப்பதால்
சோகங்கள் என்னை சாய்த்துவிடாது
சுமைதாங்கியாய் நீ இருப்பதால்
சொர்க்கமும் எனக்குத் தேவையில்லை
சாய்ந்துகொள்ள உன் மடி இருப்பதால்
No comments:
Post a Comment