Wednesday 28 December 2011

அழகு

கவிதைபாடும் கருங்குயில் குரலில்

கானகத்தில் வீழும் காட்டருவியின் ஒலியில்

கலகலத்துச் சிரிக்கும் மழலையில் சிரிப்பில்

காற்றில் மிதந்து வரும் வேய்குழல் இசையில்

கட்டவிழ்ந்து ஓடும் கன்றின் துள்ளலில்

காவிரியாற்றின் கரையோர மணலில்

கருவண்டாடும் கனகமலர்ச் சோலையில்-நான்

காண்பது எல்லாம் கவின்மிகு அழகு-ஆனால் என்

கன்னித் தமிழ்மொழியில் உள்ளதோ கடவுளின் பேரழகு.

No comments:

Post a Comment