Wednesday 28 December 2011

என்னவனே

வான்மதியை வடித்து செய்த வட்ட வதனமும்

வதனத்தில் நிறைந்திருக்கும் வசீகரமும்

கயல்மீன்கள் நாணும் கருவண்டுக் கண்களும்

கண்களில் குடியிருக்கும் கனிவுப் பார்வையும்

முல்லைநிகர் பற்களில் முறுவலின் ஆட்சியையும்

முறுவலில் முகிழ்ந்திருக்கும் அன்பின் மாட்சியும்

தாய்போல் அரவணைத்துத் தாலாட்டும் கைகளும்

தந்தைபோல் வழிநடத்தும் தங்கநிறப் பாதமுமாய்

கண்ணுக்குள் ஒளியாகக் கலந்துவிட்ட உன் உருவம்-நான்

மண்ணுக்குள் மறைந்தாலும் மறவாது மன்னவனே.

No comments:

Post a Comment