வான்மதியை வடித்து செய்த வட்ட வதனமும்
வதனத்தில் நிறைந்திருக்கும் வசீகரமும்
கயல்மீன்கள் நாணும் கருவண்டுக் கண்களும்
கண்களில் குடியிருக்கும் கனிவுப் பார்வையும்
முல்லைநிகர் பற்களில் முறுவலின் ஆட்சியையும்
முறுவலில் முகிழ்ந்திருக்கும் அன்பின் மாட்சியும்
தாய்போல் அரவணைத்துத் தாலாட்டும் கைகளும்
தந்தைபோல் வழிநடத்தும் தங்கநிறப் பாதமுமாய்
கண்ணுக்குள் ஒளியாகக் கலந்துவிட்ட உன் உருவம்-நான்
மண்ணுக்குள் மறைந்தாலும் மறவாது மன்னவனே.
வதனத்தில் நிறைந்திருக்கும் வசீகரமும்
கயல்மீன்கள் நாணும் கருவண்டுக் கண்களும்
கண்களில் குடியிருக்கும் கனிவுப் பார்வையும்
முல்லைநிகர் பற்களில் முறுவலின் ஆட்சியையும்
முறுவலில் முகிழ்ந்திருக்கும் அன்பின் மாட்சியும்
தாய்போல் அரவணைத்துத் தாலாட்டும் கைகளும்
தந்தைபோல் வழிநடத்தும் தங்கநிறப் பாதமுமாய்
கண்ணுக்குள் ஒளியாகக் கலந்துவிட்ட உன் உருவம்-நான்
மண்ணுக்குள் மறைந்தாலும் மறவாது மன்னவனே.
No comments:
Post a Comment