Wednesday 28 December 2011

விந்தை மனது

வாசலில் கோலம் வரைகின்ற போது

வந்து கடக்கும் அந்த ஒரு நொடியில்

பார்வையாலே பாராட்டுக் கூறி பிறர்

பார்க்கும் முன்பே மறையும் உன்னை

பார்த்துக் கொண்டே இருந்துவிடத் துடிக்கும்


வீதிதனில் திரும்புகையில் என்

வீடுதனைக் கடக்கும்போது ஜன்னலில்

மறைந்து நிற்கும் என்னை நோக்கி

விரைந்து செய்யும் ஒரு புன்னகையில் உன்

விரல் பிடித்து கூடவே வந்துவிடத் துடிக்கும்


மொட்டை மாடியில் நின்று வட்டநிலவை நீ ரசித்தாலும்

எட்டிப் பிடித்து நிலவிடம் என்னவனைப் பார்க்காதே

எனக்கு போட்டியாய் வந்தவளே போய்விடு மேகத்தினுள்

என் மனவானின் சந்திரனை நீ மயக்காதே

என்று திட்டித் தீர்த்துவிடத் துடிக்கும்


வசதியான பையனென்று வளைத்தாயோ என்று உனக்கு

வாய்த்த அன்னை வலிந்து கேட்ட போது அவர்கள்

வாயடக்கி விரைவில் விவாகத்துக்கு வித்திட வைத்த நீ

பாலையில் நடந்தாலும் கூடவே தொடரும் பாதையில்

பதிந்த அடிகளாய் உன்னுடனேயே சென்றவிட துடிக்குமென் விந்தைமனது

No comments:

Post a Comment