Wednesday 28 December 2011

மாற்றம்

ஒரு நிமிடம் உன்னைப் பிரிந்து இருக்க

ஒருபோதும் முடியாது என்றாய் நீ அன்று

ஒரு பத்து நாளாவது என்னை

ஒண்டியாய் இருக்கவிடு என்கிறாய் நீ இன்று

மெலிதாய் தலைவலி என்றாலும்

மனமுடைந்து போகும் என்றாய் நீ அன்று

மண்டையே பிளக்குது என்றாலும்

வேற வேலையில்லை என்கிறாய் நீ இன்று

பேசுவதை நிறுத்தாதே கண்ணே

பேதலித்திடும் என் மனது என்றாய் நீ அன்று

பேச ஆரம்பித்தால் நிறுத்தவே தெரியாதா

பெண்ணே உனக்கு என்கிறாய் நீ இன்று

என்னடா கண்ணே என்றாய் நீ அன்று

என்னடி பெண்ணே என்கிறாய் நீ இன்று

அன்று நீ காதலன் இன்றோ நீ கணவன்

காதலனாய் இருந்தவரை இனிமையாய் நீ இப்படி

கணவனானதும் இந்த மாற்றம் எப்படி?

No comments:

Post a Comment