Wednesday 28 December 2011

மனமே

சிறு வயதின் நினைவுகளை
சிதறாமல் ஏந்தும் மனமே!

இளம் வயதின் இழப்புகளை
இன்னும் சுமக்கும் மனமே!

தொலைந்து போன கனவுகளை
தொலைக்காமல் காக்கும் மனமே!

இல்லாததை எண்ணி
ஏக்கம் கொள்ளும் மனமே!

நீ மட்டும் இல்லாவிட்டால்
நிம்மதியாய் இருப்பேன்

மனமே நீ தொலைந்துவிடு
மகிழ்ச்சியாய் இருப்பேன்

மறக்க நினைக்கும் பலவற்றையும்
நினைத்து மறுகும் நிலை மாற

நினைவே நீ நீங்கிவிடு
நிம்மதியாய் இருப்பேன்.

No comments:

Post a Comment