Wednesday 28 December 2011

உவமை

அன்பே உனக்கு உவமை
ஆதவன் என நினைத்திருந்தேன் ஆனால்
அவனைவிடவும் ஒளி மிகுந்ததல்லவா உன் வதனம்

அன்பே உனக்கு உவமை
வானம் என நினைத்திருந்தேன் ஆனால்
வானத்தைவிடவும் பரந்ததன்றோ உன் இதயம்

அன்பே உனக்கு உவமை
கடல் என நினைத்திருந்தேன் ஆனால்
கடலைவிடவும் ஆழமானதன்றோ உன் காதல்

அன்பே உனக்கு உவமை
மலை என நினைத்திருந்தேன் ஆனால்
மலையைவிடவும் உயர்ந்ததன்றோ உன் பெருமை

அன்பே உனக்கு உவமை
தங்கம் என நினைத்திருந்தேன் ஆனால்
தங்கத்தைவிடவும் சிறந்ததன்றோ உன் தரம்

அன்பே உனக்கு உவமை
அன்னை என நினைத்திருந்தேன் ஆனால்
அன்னையை விடவும் அரியதன்றோ உன் அன்பு

அன்பே உனக்கு உவமை
கடவுள் என நினைத்திருந்தேன் ஆனால்
கடவுளைவிடவும் பெரியதன்றோ உன் கருணை

அதனால்தான் உன்னை என்
தமிழ் என்று நினைத்துவிட்டேன் அதைவிட
தலை சிறந்தது வேறில்லை அல்லவா.

No comments:

Post a Comment