Tuesday 27 December 2011

அன்னையின் மடியில்


பலகணி வழியே  நிலவு வீசும்
பால் ஒளிக்கற்றையில் நனையும்  சுகம்   
பால் போல்  நிலவு எரியும்
பனிவிழும் இரவில் தனியே நடக்கும் சுகம் 
சில்லென்ற இளமாலையில்
புல்வெளியில் பட்டாம்பூச்சி பிடிக்கும் சுகம் 
அதிகாலை வேளையில் கடற்கரையில்  நின்று
ஆதவன் உதிப்பதை பார்க்கும்  சுகம்  -இவை
அத்தனையையும் மிஞ்சியது அன்னையின் மடியில்
ஆதரவாய் தலை சாய்க்கும் சுகம்

No comments:

Post a Comment