பலகணி வழியே நிலவு வீசும்
பால் ஒளிக்கற்றையில் நனையும் சுகம்
பால் போல் நிலவு எரியும்
பனிவிழும் இரவில் தனியே நடக்கும் சுகம்
சில்லென்ற இளமாலையில்
புல்வெளியில் பட்டாம்பூச்சி பிடிக்கும் சுகம்
அதிகாலை வேளையில் கடற்கரையில் நின்று
ஆதவன் உதிப்பதை பார்க்கும் சுகம் -இவை
அத்தனையையும் மிஞ்சியது அன்னையின் மடியில்
ஆதரவாய் தலை சாய்க்கும் சுகம்
No comments:
Post a Comment