Wednesday 28 December 2011

நேசம் மறப்பதில்லை!

கண்ணின் மணி என்றவனே

கண்ணில் நீரை வரவைத்தது ஏனோ!

வெண்ணிலா வதனமென்றவனே

வேதனையைத் தந்துவிட்டது ஏனோ!

மாதுளம்பூ இதழ்கள் என்றவனே

மாது எனைத் தவிக்கவிட்டது ஏனோ!

பளிங்கு நிகர் இதயம் என்றவனே!

பட்டெனப் போட்டுடைத்தது ஏனோ!

பொன்னிகர் மேனி என்றவனே!

பொன்னுக்காக பெண் தேடியது ஏனோ!

பாசத்தை மறந்து நீ பணத்தைத் தேடினாலும்

நேசம் மறக்கவில்லை என் நெஞ்சம்

மறந்துவிடு என்றவனே மாட்டேன் இப்பிறவியில்

இறந்துவிடு என்று சொல் இப்போதே ஏற்கிறேன்.

No comments:

Post a Comment