பெண்ணாய் நானும் பிறந்ததை அறிந்து
பெருமை மிகவும் கொண்டு
மண்ணில் தவழ்ந்து வரும்போது
மடியில் வைத்து மகிழ்ந்து
துள்ளித் திரிந்த காலத்தில்
பள்ளிக்கூடம் சேர்த்து
கல்லூரியில் நான் கால் வைக்க
கண்ணும் கருத்துமாய் கவனித்து
ஒவ்வொரு படியாய் முன்னேற
ஒத்துழைப்பு மிக நல்கி
நல்ல வேலை கிடைத்தவுடன்
நாளும்பொழுதும் எதிர்நோக்கி
கண்ணுக்கினிய கணவனையும்
கடமை மாறாமல் தேர்ந்து கொடுத்து
முதிர்ந்த இந்த வயதினிலும்
மூப்படையா இளமையுடன்
என் நலமே தினமும் நினைத்து
தன்னலம் துறந்த தந்தைக்கு
கைம்மாறு செய்து கடனைத் தீர்க்க
கடவுளிடம் நான் வரம் கேட்பேன்
அடுத்து வரும் பிறவிகளிலும்
அவருக்கே நான் மகளாக.
(பெண் குழந்தைகளைக் கண்ணெனப் போற்றும் தந்தைகளுக்கு சமர்ப்பணம்)
பெருமை மிகவும் கொண்டு
மண்ணில் தவழ்ந்து வரும்போது
மடியில் வைத்து மகிழ்ந்து
துள்ளித் திரிந்த காலத்தில்
பள்ளிக்கூடம் சேர்த்து
கல்லூரியில் நான் கால் வைக்க
கண்ணும் கருத்துமாய் கவனித்து
ஒவ்வொரு படியாய் முன்னேற
ஒத்துழைப்பு மிக நல்கி
நல்ல வேலை கிடைத்தவுடன்
நாளும்பொழுதும் எதிர்நோக்கி
கண்ணுக்கினிய கணவனையும்
கடமை மாறாமல் தேர்ந்து கொடுத்து
முதிர்ந்த இந்த வயதினிலும்
மூப்படையா இளமையுடன்
என் நலமே தினமும் நினைத்து
தன்னலம் துறந்த தந்தைக்கு
கைம்மாறு செய்து கடனைத் தீர்க்க
கடவுளிடம் நான் வரம் கேட்பேன்
அடுத்து வரும் பிறவிகளிலும்
அவருக்கே நான் மகளாக.
(பெண் குழந்தைகளைக் கண்ணெனப் போற்றும் தந்தைகளுக்கு சமர்ப்பணம்)
No comments:
Post a Comment