Wednesday 28 December 2011

தந்தைக்கு

பெண்ணாய் நானும் பிறந்ததை அறிந்து

பெருமை மிகவும் கொண்டு

மண்ணில் தவழ்ந்து வரும்போது

மடியில் வைத்து மகிழ்ந்து

துள்ளித் திரிந்த காலத்தில்

பள்ளிக்கூடம் சேர்த்து

கல்லூரியில் நான் கால் வைக்க

கண்ணும் கருத்துமாய் கவனித்து

ஒவ்வொரு படியாய் முன்னேற

ஒத்துழைப்பு மிக நல்கி

நல்ல வேலை கிடைத்தவுடன்

நாளும்பொழுதும் எதிர்நோக்கி

கண்ணுக்கினிய கணவனையும்

கடமை மாறாமல் தேர்ந்து கொடுத்து

முதிர்ந்த இந்த வயதினிலும்

மூப்படையா இளமையுடன்

என் நலமே தினமும் நினைத்து

தன்னலம் துறந்த தந்தைக்கு

கைம்மாறு செய்து கடனைத் தீர்க்க

கடவுளிடம் நான் வரம் கேட்பேன்

அடுத்து வரும் பிறவிகளிலும்

அவருக்கே நான் மகளாக.

(பெண் குழந்தைகளைக் கண்ணெனப் போற்றும் தந்தைகளுக்கு சமர்ப்பணம்)

No comments:

Post a Comment