Wednesday 28 December 2011

கண்மணியே!

என் வீட்டுத் தாழ்வறை

வெறிச்சோடிக் கிடக்கிறது

நீ தவழாததால்


என் தோட்டத்து ரோஜாக்கள்

துவண்டு கிடக்கின்றன

நீ சூடாததால்


என் மனதின் கதவு

மூடியே கிடக்கிறது மென்விரலால்

நீ தட்டாததால்


என் பெருமை மிகு பெண்மனம்

வறுமை மிகக் கொண்டது

வளர்பிறையே நீ என் வயிற்றில் வராததால்


என் கனவுகள் வறண்டு

கானல் நீரானது கண்மணியே

கைகளில் நீ இல்லாததால்


மற்றோர் பழிச் சொல்தீர உன்

மழலைச் சொல் கேட்பது எப்போது

மனதில் வந்த நீ மடியில் வாராயோ!

No comments:

Post a Comment