Wednesday, 28 December 2011

வசந்தம்

என் கால்கள் தன்வழி
செல்ல மறுத்துவிட்டன
நீ வழியில் வந்ததால்

என் கண்கள் வேறு எதையும்
காண மறுத்துவிட்டன
நீ எதிரில் தோன்றியதால்

என் வாய் எதிர்
பேச மறுத்துவிட்டது
நீ அழகாய் பேசியதால்

என் இதயம் வேறு
நினைக்க மறுத்துவிட்டது
நீ அதில் இருப்பதால்

என் வாழ்க்கை முழுதும்
வசந்தம் ஆகிவிட்டது
நீ துணையாய் வந்ததால்

No comments:

Post a Comment